ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.