மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாகக் கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகக் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டங்களில் தற்போது வரை கனமழை நீடித்து வருகிறது. கல்குவாரி விபத்தில் மிசோரத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here