தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இந்தத் தகவலை வழங்கியுள்ளார். அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் வைத்து நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.