சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராகக் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தொடரானது எதிர்வரும் நவம்பர் 17 முதல் டிசம்பர் 08 வரை நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 06 அணிகள் மோதவுள்ளன.
இந்திய அணியின் தலைவராகச் சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கனும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராகப் பிரையன் லாராவும் செயற்படவுள்ளதுடன், தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக ஜாக் கலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த போட்டிகள் மும்பை, லக்னோ மற்றும் ராய்பூரில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது